நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 17 Jan 2023 7:00 PM GMT (Updated: 17 Jan 2023 7:01 PM GMT)

தேனி, கம்பம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தேனி

தேனி, கம்பம், சின்னஓவுலாபுரம், தேவாரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது. அதன்படி, தேனி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துத்தேவன்பட்டி, அரண்மனைப்புதூர், பூதிப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. கம்பம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கம்பம், கூடலூர், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், சின்னஓவுலாபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், இந்திராகாலனி, பூசாரிகவுண்டன்பட்டி, முத்துலாபுரம், ராமசாமிநாயக்கன்பட்டி, ஊத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும். தேவாரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, பி.ஆர்.புரம், லட்சுமிநாயக்கன்பட்டி, டி.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, டி.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story