இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 28 Sep 2023 10:15 PM GMT (Updated: 28 Sep 2023 10:15 PM GMT)

வத்தலக்குண்டு, நிலக்கோட்டை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

வத்தலக்குண்டு அருகே உள்ள எழுவனம்பட்டி துணை மின்நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி, எழுவனம்பட்டி, வெரியப்பன்நாயக்கன்பட்டி, விராலிப்பட்டி, ராமநாயக்கன்பட்டி, பண்ணைப்பட்டி, உச்சப்பட்டி, கருப்பமூப்பன்பட்டி, தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, மஞ்சளாறு அணை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இதேபோல் நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடைபெறுகிறது. இதையொட்டி நிலக்கோட்டை பேரூராட்சி, நூத்துலாபுரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, மைக்கேல்பாளையம், கே.புதூர், அப்பாவிளைப்பட்டி, குளத்துப்பட்டி, செங்கோட்டை, வீலிநாயக்கன்பட்டி, சுட்டிக்காலாடிபட்டி, அவ்வையம்பட்டி, பங்களாப்பட்டி, சீத்தாபுரம், தோப்புப்பட்டி, சின்னம்மநாயக்கன்கோட்டை, மணியக்காரன்பட்டி, கோட்டூர், என்.ஊத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை, வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.


Next Story