வடகாடு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


வடகாடு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

வடகாடு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

புதுக்கோட்டை

வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய மின்மாற்றி அமைக்கும் பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெரும், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, கீழாத்தூர், சூரன்விடுதி, அரையப்பட்டி, பசுவயல், பள்ளத்திவிடுதி, ஆலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று வடகாடு மின் வாரிய அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story