நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு - தொழில்நுட்ப கல்வி இயக்ககம்


நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு - தொழில்நுட்ப கல்வி இயக்ககம்
x

டிசம்பர் 16-ம் தேதி தேர்வுகள் நடைபெறும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது

சென்னை,

வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும். நாளை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலுக்குறைந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தற்போது 520 கி.மீ தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் மாலையில் வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது


Next Story