போலீசார் அணிவகுப்பு ஒத்திகை


போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
x

போலீசார் அணிவகுப்பு ஒத்திகை

தஞ்சாவூர்

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் 75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது. விழாவிற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார். இதையொட்டி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடந்தது. இதில் ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் மேற்பார்வையில் ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டு அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.


Next Story