முத்துப்பேட்டையில், போலீசார் அணிவகுப்பு ஊர்வலம்


முத்துப்பேட்டையில், போலீசார் அணிவகுப்பு ஊர்வலம்
x

முத்துப்பேட்டையில், போலீசார் அணிவகுப்பு ஊர்வலம்

திருவாரூர்

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டையில் வருகிற 6-ந்தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு போலீசார் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 28-ந்தேதி முத்துப்பேட்டையில் பதற்றம் நிறைந்த பகுதியில் திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. நேற்று 2-வது முறையாக முத்துப்பேட்டையில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் ஆகியோர் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது. முத்துப்பேட்டை புதிய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம் பதற்றம் நிறைந்த பகுதிகளான ஆசாத்நகர், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் நிலையம், நியூ பஜார், கொய்யா முக்கம், பங்களா வாசல், ஓடக்கரை, பட்டுக்கோட்டை சாலை வழியாக செம்படவன்காடு பைபாஸ் சாலை வரை சென்றது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், மகாலட்சுமி, ஹேமலதா, விஜயா, ஆனந்த பத்மநாபன் மற்றும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்டனர்.


Next Story