திண்டிவனம் வாலிபரிடம் போலீசார் விசாரணை


திண்டிவனம் வாலிபரிடம் போலீசார் விசாரணை
x

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை யொட்டி திண்டிவனம் வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார் திண்டிவனம் ஆர்.எஸ்.பிள்ளை வீதியில் உள்ள சுல்தான் மகன் இஸ்மாயில் (வயது 28) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இவரிடம் தேசிய புலனாய்வு துறையினர் சில ஆண்டுகளுக்கு முன்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தற்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story