தேசிய கொடி மூலமும் பிரதமர் மோடி காசு பார்க்கிறார் - ஜோதிமணி எம்.பி குற்றச்சாட்டு


தேசிய கொடி மூலமும்  பிரதமர் மோடி காசு பார்க்கிறார் - ஜோதிமணி எம்.பி குற்றச்சாட்டு
x

கோப்புப்படம் 

தேசிய கொடி இயக்கம் மூலமாகவும் பிரதமர் மோடி காசு பார்க்கிறார் என ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்றுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில், 'தேசப்பற்றிற்கும், பாஜகவுக்கும் ஒரு தொடர்பும் இல்லையே. எதற்கு இந்த தேசியக்கொடி இயக்கம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இதிலும் காசு பார்க்கிறார் மோடி! அவமானம்.' என பதிவிட்டுள்ளார்.


Next Story