எஸ்.டி.பி.ஐ. முன்னாள் தேசிய தலைவர் நினைவு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி


எஸ்.டி.பி.ஐ. முன்னாள் தேசிய தலைவர் நினைவு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 4 April 2023 7:00 PM GMT (Updated: 4 April 2023 7:01 PM GMT)

எஸ்.டி.பி.ஐ. முன்னாள் தேசிய தலைவர் நினைவு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் சயீத் சாகிப் நினைவு தினத்தை முன்னிட்டு 'சயீத் சாகிப் ஓர் சகாப்தம்' என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயல்வீரர்கள் உறுதி மொழி நிகழ்ச்சி நாகை மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அக்பர் அலி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கல்லார் மைதீன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் மெய்தீன், எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட தலைவர் சேக் அலாவுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நிஜாம், சட்டசபை தொகுதி துணைத்தலைவர் பகுருதீன், இணைச்செயலாளர் சம்சு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் யாமின் கலந்து கொண்டு பேசினார். முடிவில் மாவட்ட செயலாளர் அபுஹாசிம் நன்றி கூறினார்.


Next Story