நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்


நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
x

நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகர போலீஸ் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம், 28 ேபர் புகார் மனுக்களை அளித்தனர். அவர் மனுக்கள் விவரங்களை கேட்டறிந்து அவற்றின் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறினார். அப்போது துணை போலீஸ் கமிஷனர்கள் சரவணகுமார், அனிதா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் 22 பேர் கலந்து கொண்டு போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


Next Story