குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கரூர்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 23-வது வார்டு நல்லதங்காள் ஓடை, முருகனாதபுரம், பிரதட்சணம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தபகுதியில் கடந்த 10 நாட்களாக சரியாக குடிநீர் வரவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த மேற்கண்ட பகுதி பொதுமக்கள் நேற்று இரவு காலிக்குடங்களுடன் கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள மேற்கு பிரதட்சணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார், மாநகராட்சி உதவி பொறியாளர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story