ரெயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த மயில்



நல்லம்பள்ளி:
தர்மபுரி அரசு கலை கல்லூரி பின்புறம் பெங்களூரு-சேலம் ரெயில்வே தண்டவாள பகுதியில் நேற்று ஆண் மயில் ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மயில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இலக்கியம்பட்டி கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே மயில் மின்சாரம் தாக்கி இறந்ததா? அல்லது ரெயிலில் அடிபட்டு இறந்ததா? என தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire