பல்வேறு வழக்குகளுக்கு ரூ.8¾ கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு


பல்வேறு வழக்குகளுக்கு ரூ.8¾ கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
x
தினத்தந்தி 9 Sep 2023 6:45 PM GMT (Updated: 9 Sep 2023 6:47 PM GMT)

தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் பல்வேறு வழக்குகளுக்கு ரூ.8¾ கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட நீதிபதி திலகம் தலைமையில் நடைபெற்ற இந்த நீதிமன்றத்தில் அனைத்து நீதிபதிகளும் கலந்து கொண்டனர். 7998 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 3747 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.8 கோடியே 79 லட்சத்து 32,468 நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் நீதிமன்ற நீதிபதி இருதய ராணி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


Next Story