வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை


வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
x

கோப்புப்படம்

கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோவை,

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை (செவ்வாய்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஜூலை 16ந் தேதி) விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.


Next Story