பெருந்துறை- சென்னிமலை ரோட்டில் குளம்போல் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதி


பெருந்துறை- சென்னிமலை ரோட்டில்   குளம்போல் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதி
x

வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடு

பெருந்துறை சென்னிமலை ரோட்டில் நேற்று மாலை மழை பெய்தது. இதனால் மழை நீர் வெளியேற வழியில்லாமல், ரோட்டில் குளம்போல் தேங்கி நின்றது. மேலும் அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் இருந்து தினசரி மார்க்கெட் ரவுண்டானா வரை ரோட்டின் மேற்கு பகுதியில் மழை நீர் வெளியேறாமல் நிற்பதால், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர். மேலும் 4 சக்கர வாகனங்கள் செல்லும் போது மழைநீரானது பக்கவாட்டில் வாரி இறைத்தபடி செல்கிறது. அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகன ஓட்டிகள் சென்றால் அவர்கள் மீது மழைநீர் வாரி இறைக்கப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நனைந்தபடி செல்கிறார்கள். இதை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story