மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி


மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
x

கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 75). இவர் நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பாடாலூர் வழித்துணை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் அவர் கோவிலில் மதியம் அன்னதானம் சாப்பிட்டு விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக தனது சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ரெங்கசாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் ரெங்கசாமி அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரெங்கசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story