மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு



மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் இறந்தார்.
ஆலங்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 67). இவர், நேற்று முன்தினம் சந்தைப்பேட்டை கடலை மில் அருகில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அரசடிபட்டியை சேர்ந்த நாராயணன் மகன் பாண்டிசெல்வம் (30) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire