சத்துணவு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x

சத்துணவு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே கண்ணில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் மணிமாணிக்கம் முன்னிலை வகித்தார். அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களில் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி வழங்கிடவேண்டும், சத்துணவு உண்ணும் மாணவ-மாணவிகளுக்கு அரசு வழங்க இருக்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story