பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று இயங்கும் என அறிவிப்பு


பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று இயங்கும் என அறிவிப்பு
x

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பத்திரப்பதிவு மேற்கொள்ள அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி, ஆகஸ்ட் 3-ம் தேதி (இன்று) பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் அசையா சொத்து குறித்த பத்திரப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள விரும்புவதால், பொது விடுமுறை நாளான ஆக.3-ம் தேதி சனிக்கிழமை (இன்று) ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பத்திரப்பதிவு மேற்கொள்ள அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, பதிவு அலுவலகங்கள் இன்று காலை 10 மணி முதல் பத்திரப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் இருக்கும். இது தொடர்பாக அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப்பதிவுக்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story