நீலகிரி தொகுதி; தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா வெற்றி


நீலகிரி தொகுதி; தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா வெற்றி
x

கோப்புப்படம்

நீலகிரி தொகுதியில் ஆ.ராசா-வின் வெற்றியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உதகை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா தற்போது வெற்றியை உறுதி செய்துள்ளார். அவர் மொத்தமாக 4,73,212 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அவரைத்தொடர்ந்து பா.ஜனதா வேட்பாளர் எல்.முருகன் 2,32,627 வாக்குகள் பெற்று 2ம் இடம் பிடித்துள்ளார். அ.தி.மு.க வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் 2,20,230 வாக்குகள் பெற்று 3ம் இடமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயகுமார் 58, 821 வாக்குகள் பெற்று 4ம் இடமும் பெற்றுள்ளனர்.


Next Story