உளுந்தூர்பேட்டை அருகே மின்மாற்றியில் தாமிர கம்பி திருட்டு


உளுந்தூர்பேட்டை அருகே  மின்மாற்றியில் தாமிர கம்பி திருட்டு
x
தினத்தந்தி 14 Nov 2022 6:45 PM GMT (Updated: 14 Nov 2022 6:46 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே மின்மாற்றியில் தாமிர கம்பி திருடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட ஒலையனூர் பகுதியில் மின்மாற்றியில் உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்த தாமிர கம்பிகள் மற்றும் ஆயிலை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த மின்வாரிய உதவி மின் பொறியாளர் நாகராஜன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார் மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story