டி.என்.பாளையம் அருகேமதுவிற்ற பெண் கைது


டி.என்.பாளையம் அருகேமதுவிற்ற  பெண் கைது
x

டி.என்.பாளையம் அருகே மதுவிற்ற பெண் கைது செய்யப்பட்டாா்

ஈரோடு

டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் பழையூர் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் வகையில் ைகயில் சாக்குப்பையுடன் ஒரு பெண் நின்றுகொண்டு இருந்தார். இதையடுத்து போலீசார் அந்த பையை வாங்கி பார்த்தனர். அதில் 20 மது பாட்டில்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் கொங்கர்பாளையம் பழையூர் பகுதியை சேர்ந்த வைதேகி (வயது 34) என்பதும், அங்கு நின்று கொண்டு சட்டத்துக்கு புறம்பாக மது விற்றதும் ெதரியவந்தது. இதையடுத்து போலீசார் வைதேகியை கைது செய்து, அவரிடம் இருந்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story