ஆயிமகமாயி சமயபுரத்தாள் கோவிலில் நவசண்டி யாகம்


ஆயிமகமாயி சமயபுரத்தாள் கோவிலில் நவசண்டி யாகம்
x

ஆயிமகமாயி சமயபுரத்தாள் கோவிலில் நவசண்டி யாகம் நடந்தது.

திருச்சி

உலக நன்மைக்காக திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் சிம்கோ காலனியில் உள்ள ஆயிமகமாயி சமயபுரத்தாள் கோவிலில் நவசண்டி யாகம் கடந்த 2 நாட்களாக நடந்தது. யாகத்தின் தொடக்க நாளில் காலையில் காவிரி ஆற்றில் இருந்து கோவிலுக்கு புனிதநீர் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் விக்னேஷ்வர பூஜை, பூர்ணாஹீதி, தீபாராதனை நடைபெற்றது. மாலையில் நவசண்டி யாகத்தின் முதல் கால பூஜைகள் நடந்தன. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக நவசண்டி யாகம் நடைபெற்றது. பின்னர் அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ அம்பாள் வீதி உலா நடைபெற்றது.


Next Story