பெண்களுக்கு அதிகாரம் தந்தால் நாடே வலிமை பெறும்: சோனியா காந்தி பேச்சு


பெண்களுக்கு அதிகாரம் தந்தால் நாடே வலிமை பெறும்: சோனியா காந்தி பேச்சு
x

பெண்களுக்கு அதிகாரம் தந்தால் நாடே வலிமை பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசினார்.

சென்னை,

பெண்களுக்கு அதிகாரம் தந்தால் நாடே வலிமை பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திமுக நடத்தும் மகளிர் உரிமை மாநாட்டில் பேசினார்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. கருணாநிதி நூற்றாண்டை ஒட்டி திமுக மகளிர் அணி சார்பில் இந்த மகளிர் உரிமை மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, கனிமொழி எம்.பி உள்பட தேசிய அளவிலான பெண் அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் சோனியா காந்தி பேசியதாவது:-

  • ஒடுக்கப்பட்டவர் நலனுக்காக பாடுபட்டவர் கருணாநிதி
  • சாதி, மதம், கடந்து சிந்தித்து உழைத்தவர் கருணாநிதி
  • பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர்.
  • பெண்களுக்கான உரிமையை பெறுவது நீண்ட பயணம்
  • பெண்கள் முன்னேற்றத்திற்காக சுதந்திர போராட்டத்தின் போதே போராடிய கட்சி காங்கிரஸ்
  • ஒரு பெண் படித்தால் அந்த குடும்பமே படித்தது போல ஆகும்.
  • காந்தி, நேரு போன்றவர்கள் அனைவருக்கும் ஓட்டு என்ற உரிமையை உறுதி செய்தனர்.

Next Story