நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு


நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில்  நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
x

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நல்லிணக்க நாள் தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இதில் நல்லிணக்க நாள் உறுதிமொழியான "நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்." என்ற உறுதிமொழியினை கலெக்டர் வாசிக்க அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் தேவிகா ராணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story