நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு பிளக்ஸ் பேனரில் கோரிக்கையை எழுதி வந்தவரால் பரபரப்பு


நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு  பிளக்ஸ் பேனரில் கோரிக்கையை எழுதி வந்தவரால் பரபரப்பு
x

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு பிளக்ஸ் பேனரில் கோரிக்கையை எழுதி வந்தவரால் பரபரப்பு

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி அருகே உள்ள மேற்கு பாலப்பட்டியை சேர்ந்தவர் காந்தியவாதி ரமேஷ். இவர் அகிம்சா சோசலிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவராக இருந்து வருகிறார். இவர் செல்லப்பம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்திருப்பதாக நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே மனு அளித்திருந்தார்.

இதனிடையே அந்த மனு மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அவர் கோரிக்கையை பிளக்ஸ் பேனரில் மனுவாக எழுதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசனிடம் அளித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story