மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர் பலி


மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர் பலி
x
தினத்தந்தி 2 March 2023 6:45 PM GMT (Updated: 3 March 2023 10:05 AM GMT)

ரிஷிவந்தியம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அருகே அரியலூர் காமராஜ் தெருவை சேர்ந்தவர் கோபாலகண்ணன் மகன் பார்த்திபன் (வயது 33). கார் டிரைவர். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பகண்டை கூட்டுரோட்டுக்கு புறப்பட்டு சென்றார். புற்றுக்கோவில் அருகே சென்றபோது எதிரே அத்தியூர் ஆசிரியர் நகரை சேர்ந்த செல்லப்பன் மகன் வெங்கடேசன் (44) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். இதில் கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் மேல் சிகிச்சைக்காக பார்த்திபன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story