ஈரோட்டில் மாயமான சிறுவர்கள் சென்னையில் மீட்பு


ஈரோட்டில் மாயமான சிறுவர்கள் சென்னையில் மீட்பு
x
சென்னை

சென்னை,

ஈரோட்டை சேர்ந்த முருகேசன் மற்றும் சசிகுமார் நேற்று ஈரோடு ரெயில்வே போலீசில் தனித்தனியாக புகார் ஒன்றை அளித்தனர். அதில், தங்களுடைய 14 வயதுடைய மகன்கள் வீட்டில் சண்டையிட்டு வெளியே சென்றனர். இதுவரை வீடு திரும்பவில்லை. 2 பேரும் ரெயில் மூலம் சென்றிருக்கலாம் என்ற சந்தேகிக்கிறோம். எனவே, 2 பேரையும் மீட்டுத்தர வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தனர்.

புகாரின் பேரில் காணாமல் போன சிறுவர்களின் புகைப்படங்கள் பெறப்பட்டு அனைத்து ரெயில்வே போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டது. இதேபோல, சிறுவர்களின் செல்போன் சிக்னல் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை போலீசார் கண்காணித்தனர்.

அப்போது, செல்போன் சிக்னல் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே காண்பித்தது. இதையடுத்து, சென்டிரல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சிறுவர்கள் இருக்கும் இடத்திற்கு ரெயில்வே போலீசார் விரைந்து சென்றனர். பின்னர், சிறுவர்கள் 2 பேரையும் மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இதையடுத்து, போலீசார் சிறுவர்களின் பெற்றோரை வரவழைத்து, சிறுவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


Next Story