சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிப்பு


சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்  பொன்முடி விடுவிப்பு
x

அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் இருந்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்

சென்னை,

விழுப்புரத்தை சேர்ந்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் இருந்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story