மினிபஸ் டிரைவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
மதுபோதையில் மினி பஸ் ஓட்டி வந்த டிரைவருக்கு போலீசார் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கன்னியாகுமரி
அழகியமண்டபம்:
திங்கள்சந்தை பகுதியில் நேற்று குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின், சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பர தாணு தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி பஸ்சை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால், டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். இதையடுத்து போலீசார் தங்களது வாகனத்தில் துரத்திச் சென்று மினி பஸ்சை மடக்கிப் பிடித்தனர். பின்னர், மினி பஸ் டிரைவரான சவுந்தராஜனிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் மது குடித்து விட்டு பஸ்சை ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மினி பஸ்சை பறிமுதல் செய்து ரூ.15 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story