பால் வியாபாரி தற்கொலை


பால் வியாபாரி தற்கொலை
x

பணகுடியில் பால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடி சர்வோதய தெருவை சேர்ந்த அய்யம்பெருமாள் மகன் சுந்தரராஜ் (வயது 36), பால் வியாபாரி. இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். இவர் சரிவர பால் வியாபாரம் செய்யாமல் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவருடைய குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் வெறுப்படைந்த சுந்தரராஜ் தனது வீட்டின் உத்திரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும் பணகுடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். சுந்தரராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story