தீக்குச்சி தயாரிப்பு தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்த மூதாட்டி குடும்பத்திற்கு நிதியுதவி


தீக்குச்சி தயாரிப்பு தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்த மூதாட்டி குடும்பத்திற்கு நிதியுதவி
x
தினத்தந்தி 3 July 2023 6:45 PM GMT (Updated: 4 July 2023 9:55 AM GMT)

கோவில்பட்டியில் தீக்குச்சி தயாரிப்பு தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்த மூதாட்டி குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே சித்திரம்பட்டி கிராமத்தில் உள்ள தீக்குச்சி தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில்பட்டி ஊரணி தெருவை சேர்ந்த தங்கவேல் மனைவி மாரியம்மாள் (வயது 63) உடல் கருகி பரிதாபமாக பலியானார். அவரது குடும்பத்தினருக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் ரூ.4½ லட்சம் இழப்பீடு தருவதாக கூறி, அன்றைய தினம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். மீதித்தொகையான ரூ.1½ லட்சத்தை வழங்க கோரி கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு மூதாட்டியின் மகள்கள் குடும்பத்

தினருடன், சி.ஐ.டி.யு. அமைப்பினர் காத்திருப்பு ேபாராட்டம் நடத்தினர். அவர்களுடன் வருவாய் ஆய்வாளர் ராஜசேகர், தொழிற்சாலை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் ரூ.1½ லட்சத்திற்கான காசோலையை வருவாய் ஆய்வாளர் மூதாட்டி குடும்பத்தினரிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story