சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x

தர்மபுரி குள்ளனூரில் நடந்த சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி

தர்மபுரி அடுத்த குள்ளனூரில் பழமை வாய்ந்த சக்தி மாரியம்மன் கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த கோவில் கும்பாபிேஷக விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து வாஸ்து பூஜை, யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் மற்றும் பூர்ணாஹூதி நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முடங்க புனித நீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சக்தி மாரியம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடந்தது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.


Next Story