மக்காச்சோளப் பயிரில் தீ


மக்காச்சோளப் பயிரில் தீ
x
தினத்தந்தி 18 Feb 2023 6:45 PM GMT (Updated: 18 Feb 2023 6:46 PM GMT)

சங்கரன்கோவில் அருகே மக்காச்சோளப் பயிரில் தீப்பிடித்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 8 பேருக்கு சொந்தமான அறுவடை செய்யாத மக்காச்சோளம் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஏற்கனவே அறுவடை செய்த மற்ற விவசாயிகள் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள கழிவுகளை தீ வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக அறுவடை செய்யாத மக்காச்சோளத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


Related Tags :
Next Story