காதல் ஜோடியை தாக்கி நகை, செல்போன் பறிப்பு



ஆம்பூர் அருகே காதல் ஜோடியை தாக்கி நகை, செல்போன் பறித்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பச்சக்குப்பம் ரெயில்வே மேம்பாலம் அருகே காதல் ஜோடி ஒன்று தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் தனியாக இருந்த காதல் ஜோடியை சரமாரியாக தாக்கினர். மேலும் அவர்களிடம் இருந்த 2 பவுன் சங்கிலி, செல்போன் மற்றும் பணம் உள்ளிட்டவைகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து காதல் ஜோடியினர் 2 பேரும் ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire