வட்டார அளவில் வேலைவாய்ப்பு முகாம்


வட்டார அளவில் வேலைவாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 20 March 2023 6:45 PM GMT (Updated: 20 March 2023 6:45 PM GMT)

வேதாரண்யம், திருக்குவளையில் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 23,25-ந்தேதிகளில் நடக்கிறது என்று கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம், திருக்குவளையில் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 23,25-ந்தேதிகளில் நடக்கிறது என்று கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பு முகாம்

நாகை மாவட்ட நிர்வாகம், மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் ஆகியவை இணைந்து முன்னணி தனியார் துறை நிறுவனங்களில் வேலை தேடுபவர்களுக்கான வட்டார அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

வருகிற 23- ந் தேதி (வியாழக்கிழமை) அன்று வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 25- ந்தேதி (சனிக்கிழமை) திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலர் அரசினர் மேல் நிலைப் பள்ளியிலும் முகாம் நடக்கிறது.

இருபாலரும் கலந்து கொள்ளலாம்

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கும் இந்த முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு படித்த வேலைவாய்ப்பற்ற 18 முதல் 35 வயது வரையுள்ள இளைஞர்கள் (ஆண், பெண் இருபாலர்கள்) கலந்து கொள்ளலாம்.

வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை தரும் அனைவரும் முகக் கவசம் அணிந்து வரவேண்டும். அத்துடன் சுய விவரக்குறிப்பு, ஆதார் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story