கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரிக்கை


கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 7 May 2023 6:30 PM GMT (Updated: 7 May 2023 6:06 PM GMT)

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரியலூர்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், மாவட்ட தேர்தல் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு என முப்பெரும் விழா அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். கிராம நிர்வாக ஊழியர்களுக்கு பணி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி முடித்தும், பயிற்சி முடித்தும் தகுதி காண் பருவம் முடிக்காத கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் உள்ளனர். இதனால் உரிய பணப்பலன்கள் பெற முடியாமல் உள்ளனர். 2 வார காலத்திற்குள் அனைத்து பணப்பலன்களையும் பெற மாவட்ட, வட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அனைத்து வட்ட தலைநகரங்களிலும் கவன ஈர்ப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story