கருங்கல்பாளையம் சந்தைக்கு 500 மாடுகள் விற்பனைக்கு வந்தன


கருங்கல்பாளையம் சந்தைக்கு 500 மாடுகள் விற்பனைக்கு வந்தன
x

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு 500 மாடுகள் விற்பனைக்கு வந்தன.

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு 500 மாடுகள் விற்பனைக்கு வந்தன.

கன்றுக்குட்டிகள்

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை கூடி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு 100 கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இவைகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை விற்பனை ஆனது.

நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கரூர், திருப்பூர், கோவை, திருச்சி, திண்டுக்கல், தேனி, சேலம், மதுரை உள்பட பிற மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

500 மாடுகள்

350 பசுமாடுகள், 150 எருமை மாடுகள் என மொத்தம் 500 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையிலும் விலை போனது.

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து, விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை வாங்கி சரக்கு வாகனங்களில் ஏற்றி சென்றார்கள்.

இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறும்போது, 'ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் மாட்டு சந்தைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த மாநில வியாபாரிகள் குறைந்த எண்ணிக்கையில் வந்திருந்தனர். எனினும் இன்று (அதாவது நேற்று) கூடிய சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனையானது' என்றனர்.


Next Story