நாளை முதல் 3 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு


நாளை முதல் 3 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு
x

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.

நாமக்கல்

வானிலை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று 2 மி.மீட்டரும், நாளை (திங்கட்கிழமை) 6 மி.மீட்டரும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) 18 மி.மீட்டரும், 28-ந் தேதி 10 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று 6 கி.மீட்டர் வேகத்திலும், நாளை 12 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வடகிழக்கு திசையில் இருந்து வீசும். அதேபோல் நாளை மறுநாள் 10 கி.மீட்டர் வேகத்திலும், 28-ந் தேதி 5 கி.மீட்டர் வேகத்திலும் கிழக்கு திசையில் இருந்து காற்று வீசும்.

இதனிடையே வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 89.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 66.2 டிகிரியாகவும் இருக்கும். இதனிடையே காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 80,86,86,86 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக முறையே 40,60,60,62 சதவீதமாகவும் இருக்கும்.

லேசான மழை

சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாவட்டத்தில் சில இடங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனிடையே கடந்த வாரம் இறந்த கோழிகள் இறக்கை அழுகல், புஞ்சை நச்சு மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களால் இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது. எனவே பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்கம் உள்ளதா? என பரிசோதித்து, அதற்கு ஏற்ப தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story