வக்கீல்கள் 3-வது நாளாக ஆர்ப்பாட்டம்


வக்கீல்கள் 3-வது நாளாக ஆர்ப்பாட்டம்
x

வக்கீல்கள் 3-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

இந்திய குற்றவியல் சட்டங்களில் மாற்றங்களை அறிவிக்கும் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அரசு அந்த மசோதாவில் குற்றவியல் சட்டங்களின் 3 முக்கிய பிரிவான இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை சட்டம், இந்திய சாட்சியை சட்டம் ஆகியவற்றின் பெயரை சமஸ்கிருதத்தில் மாற்றியும், சட்டத்தில் உள்ள சரத்துகளில் பல்வேறு மக்கள் விரோத சரத்துகளை புதிதாக திணித்திருப்பதால், மத்திய அரசின் இந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான புதிய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பு கரூர் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் நேற்று 3-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் தமிழ்வாணன், கூட்டமைப்பின் இணைச்செயலாளர் நவநீதன், வக்கீல்கள் சதாசிவம், நன்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story