பாலூர் அருகே ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரால் தரைப்பாலங்கள் மூழ்கின; மேம்பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை


பாலூர் அருகே ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரால் தரைப்பாலங்கள் மூழ்கின; மேம்பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
x

பாலூர் அருகே ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரால் தரைப்பாலங்கள் மூழ்கின. மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு

தரைப்பாலங்கள் மூழ்கின

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அருகே குருவன்மேடு, வேண்பாக்கம், வடக்குப்பட்டு, ரெட்டிபாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் அனைத்து தேவைக்கும், செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு குருவன்மேடு மற்றும் ரெட்டிப்பாளையம் பகுதிகளில் தரைப்பாலங்கள் உள்ளன.

இந்த நிலையில், வாலாஜாபாத் அருகே உள்ள தென்னேரி ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரால் குருவன்மேடு, ரெட்டிபாளையம் பகுதிகளில் உள்ள தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் குருவன்மேட்டில் இருந்து செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவில் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பள்ளி மாணவர்களும், வேலைக்கு செல்லக்கூடியவர்களும் கடும் அவதிக்குள்ளானார்கள்.

பொதுமக்கள் கோரிக்கை

ஒவ்வொரு ஆண்டும் மழையின்போதும் இந்த சாலை மழைநீரால் துண்டிக்கப்படுகிறது. தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டு இருந்தாலும், அதை தாண்டி மழைநீர் செல்கிறது. தற்போது மழை நீரால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் 30 கிலோ மீட்டர் சுற்றி செங்கல்பட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கிராம மக்கள் பாதிக்காத வண்ணம் அரசு மே்பாலம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story