கோவிலில் பரிதாபம் சேலையில் விளக்கு தீ பிடித்து பெண் பலி


கோவிலில் பரிதாபம் சேலையில் விளக்கு தீ பிடித்து பெண் பலி
x
சென்னை

விருகம்பாக்கம்,

விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், காந்திநகர், பாரதி தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள விநாயகர் கோவிலிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சாமி கும்பிட சென்றார். அப்போது கோவில் வளாகத்தில் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டு இருந்தது.

மாரியம்மாள் அதன் அருகே நின்றபோது சேலையில் எதிர்பாராத விதமாக அகல் விளக்கு தீபத்தில் இருந்த தீபிடித்தது அவரது உடலில் பரவியது. மாரியம்மாள் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மாரியம்மாள் உடலில் பரவிய தீயை அணைத்தனர். பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் போலீசார் இறந்து போன மாரியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


Next Story