கபிஸ்தலம் ஊராட்சி தலைவர் தீக்குளித்து தற்கொலை


கபிஸ்தலம் ஊராட்சி தலைவர் தீக்குளித்து தற்கொலை
x

கபிஸ்தலம் ஊராட்சி தலைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது கணவர் படுகாயம் டைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

கபிஸ்தலம் ஊராட்சி தலைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது கணவர் படுகாயம் டைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஊராட்சி தலைவர் தீக்குளிப்பு

தஞ்ைச மாவட்டம் கபிஸ்தலம் பங்களா தெருவை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 60). இவரது மனைவி சுமதி(57). கபிஸ்தலம் ஊராட்சி தலைவரான இவர் சிறப்பாக பணியாற்றியதற்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.சுமதிக்கும், அவரது கணவர் குணசேகரனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த சுமதி நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டு வீட்டின் அறை கதவை மூடிவிட்டாா்.

இருவரும் சிகிச்சைக்கு அனுமதி

தீயின் வெப்பம் தாங்காமல் சுமதி சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவருடைய கணவர் குணசேகரன் அறைக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று உயிருக்கு போராடிய மனைவி சுமதியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் உடல் கருகி படுகாயம் அடைந்தார்.கணவன்-மனைவி இருவரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம், பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமதியையும், அவரது கணவர் குணசேகரனையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சுமதி மட்டும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பாிதாப சாவு

நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சுமதி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவரது கணவர் குணசேகரன் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குணசேகரன்-சுமதி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒருவருக்கு திருமணமாகி கடந்த சில நாட்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.குடும்ப பிரச்சிைனயால் மனவேதனை அடைந்த ஊராட்சி தலைவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் கபிஸ்தலம் பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story