லாரி மோதி தொழிலாளி பலி


லாரி மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 12 Jun 2023 4:34 PM GMT (Updated: 13 Jun 2023 6:22 AM GMT)

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

எரியோடு அருகே உள்ள தோகைமலைகோட்டையை சேர்ந்தவர் முருகேசன் (வயது 35). கட்டிட தொழிலாளி. கடந்த 6-ந்தேதி இவர், மோட்டார் சைக்கிளில் வடமதுரைக்கு சென்றார். எரியோடு-வடமதுரை சாலையில் உள்ள தனியார் எண்ணெய் ஆலை அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த லாரி, முருகேசனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லாரி டிரைவர் திருப்பதி (31) மீது, வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story