செல்போன் திருடர்களை மடக்கி பிடித்த போலீசாருக்கு பாராட்டு


செல்போன் திருடர்களை மடக்கி பிடித்த போலீசாருக்கு பாராட்டு
x

செல்போன் திருடர்களை மடக்கி பிடித்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் கடந்த 20-ந் தேதி நள்ளிரவு தனியார் ஓட்டலில் பணிபுரியும் ஆனந்த் (வயது 19) என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் செல்போனை பறித்து சென்றதாக கிடைத்த தகவலின்பேரில், அவர்களை உடனடியாக பிடிக்க போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் இரவுரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு வாக்கிடாக்கி மூலம் உத்தரவு பிறப்பித்தார். இந்தநிலையில் செல்போன் பறித்து தப்பிய 3 பேரும் மத்திய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த ஒருவரிடம் செல்போனை பறித்துகொண்டு மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்றனர். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், ஏட்டுக்கள் டேவிட்சாலமன், செந்தில், ஜோசப் சகாயராஜ் ஆகியோர் செல்போன் கொள்ளையர்களை சம்பவஇடத்திலேயே பிடித்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், ஏற்கனவே பறித்த 3 செல்போன்கள் உள்பட மொத்தம் 4 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். செல்போன் பறித்த கொள்ளையர்களை துரிதமாக செயல்பட்டு பிடித்த போலீசாரை கமிஷனர் கார்த்திகேயன் பணிநற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


Next Story