கொடைக்கானல் மலர்க் கண்காட்சி நுழைவுக் கட்டணம் உயர்வு


கொடைக்கானல் மலர்க் கண்காட்சி நுழைவுக் கட்டணம் உயர்வு
x

கொடைக்கானலில் 61-வது மலர்க் கண்காட்சி மற்றும் கோடைவிழா நாளை தொடங்குகிறது

திண்டுக்கல்,

மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் 61-வது மலர்க் கண்காட்சி மற்றும் கோடைவிழா நாளை தொடங்குகிறது.நாளை முதல் 26-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது . கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், சுற்றுலாத்துறை மூலமாக கோடைவிழாவும் நடத்தப்பட உள்ளது.இவ்விழாவில் 10 நாட்களும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி, நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

இந்த நிலையில், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர்க் கண்காட்சி நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சிறியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.15ல் இருந்து ரூ.35 ஆகவும் பெரியவர்களுக்கு ரூ.75ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.இக்கட்டணம் 26ம் தேதி வரை 10 நாட்கள் மட்டும் அமலில் இருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story