நர்சிங் மாணவி கடத்தல்


நர்சிங் மாணவி கடத்தல்
x
தினத்தந்தி 11 Jun 2023 6:45 PM GMT (Updated: 12 Jun 2023 9:48 AM GMT)

நர்சிங் மாணவியை கடத்தி சென்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் தாலுகா ஆ.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் மகன் பாலு (வயது 36). இவர் மணலூர்பேட்டையில் உள்ள தனியார் இன்ஸ்டிடியூட்டில் டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயதுடைய மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று விட்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற பாலுவையும் தேடி வருகின்றனர்.


Next Story