கார்கில் வெற்றி தினம்: வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


கார்கில் வெற்றி தினம்: வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

கார்கில் வெற்றி தினத்தில் வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர் கொண்டு முறியடித்தனர். இந்த போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கார்கில் வெற்றி தினத்தில் தேசத்தை காத்த வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "25-வது கார்கில் வெற்றி தினத்தில், ஈடு இணையற்ற துணிச்சலுடன் நமது தேசத்தைக் காத்த வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம். நமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அவர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவு கூர்வோம்" என்று தெரிவித்துள்ளார்.



Next Story