சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை


சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை
x

சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கோடை விடுமுறை மற்றும் சபரிமலை சீசன் காலத்திலும் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அலை மோதும். இந்தநிலையில் தொடர் மழையால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் மேகமூட்டத்தினால் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியும், மாலையில் சூரியன் மறையும் காட்சியும் தெரியவில்லை. இதனால் அந்த சமயத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தை காண முடியவில்லை.


Next Story