காரில் கஞ்சா கடத்திய வழக்கில்மேலும் ஒருவர் கைது


காரில் கஞ்சா கடத்திய வழக்கில்மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 10 May 2023 6:45 PM GMT (Updated: 10 May 2023 6:46 PM GMT)

காரில் கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான ஜே.ஜே. நகரில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் கடந்த 5-ந் தேதி சுமார் 160 கிலோ கஞ்சாவுடன் கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் ராமேசுவரம் புது ரோடு பகுதியை சேர்ந்த குமரன் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story